மாநிலங்களவை எம்.பி ஆகும் ஹர்பஜன் சிங்! ஆம் ஆத்மி கட்சியுடன் இணைகிறாரா?
Posted on 18/03/2022
ஹர்பஜன் சிங் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அம்மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளதால் அதில் ஹர்பஜன் சிங் ஒருவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் 117 இடங்களில் 92 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றது. அதன்பிறகு முதலமைச்சராக பகவந்த் சிங் மான் பதவியேற்றுக் கொண்டார். அவர் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு பதிலாக, தனது சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி தலைவர்கள், கிராமத்தினர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பகவ்ந்த் சிங் பதவியேற்பு குறித்து பதிவிட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றும் புதிய முதலமைச்சரான எனது நண்பர் பகவந்த் சிங் மானுக்கும் எனது வாழ்த்துக்கள். சொந்த கிராமமான கட்கர்கலானில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதை கேட்பதில் மகிழ்ச்சி. என்ன ஒரு புகைப்படம். அம்மாவுக்கு பெருமையான தருணம்.” என்று எழுதியுள்ளார்.
Tags: News, Hero