பழனிச்சாமி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது : சுப்ரமணியன் சுவாமி
Posted on 15/02/2017
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,க்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் டிஜிபி குறித்து புகார் அளித்துள்ளேன். பழனிச்சாமி முதல்வராவதை தடுக்கவே இது போன்று செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags: News, Madurai News, Art and Culture