சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

இந்தியாவில் கடந்த 132 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40-க்கு, டீசல் விலை ரூ. 91.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டின் மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 
 
சமீபத்தில் கச்சா எண்ணெய் பீப்பாய் 139 டாலராக உயர்ந்தது. இந்தியாவில் ஒரு நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என கூறப்பட்டது.
 
பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக உயர்ந்தது. பிப்ரவரி 1ல் 97 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் போரால் அதிகரித்தது.
 
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு திடீரென சரிவு கண்டுள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக குறைந்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top