கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடை அடைப்பு
Posted on 16/09/2016
காவிரி பிரச்னையின் போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த முழு கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் துவங்கியது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கடையடைப்பு, ரயில், சாலை மறியல்கள் நடைபெறுகிறது. முழு அடைப்பையொட்டி ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி வரை 4,600 பெட்ரோல் பங்க்கள் மூடப்படவுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்பின் காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு பஸ்கள், மின்சார, மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழகம் முழுவதும் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags: News