வர்தா புயல் தாக்கத்தால் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று செயல்பட ஆரம்பித்தது
Posted on 12/12/2016
வர்தா புயல் தாக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று செயல்பட ஆரம்பித்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் வேகமான காற்றினால் ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், மும்பை, டெல்லி போன்ற பல்வேறு நகரங்களில் இருந்துவந்த விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. பின், அவை பெங்களூரு ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படவும், மறு உத்தரவு வரும்வரை திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விமான போக்குவரத்து திடீரென இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினார்.
தற்போது, வர்தா புயல் திருவண்ணாமலை வழியாக பெங்களூரை சென்றடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதே போல, தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமானநிலையம் இன்று காலை முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
Tags: News, Art and Culture, Academy