நெல்லையில் கால் யுவர் கலெக்டர் திட்டம் - மக்கள் வரவேற்பு!
Posted on 16/08/2017
நெல்லை மாவட்டத்தில் பொது மக்கள் பிரச்சனை குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கால் யுவர் கலெக்டர் என்ற புதிய திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
நெல்லை கலெக்டராக பொறுப்பு ஏற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் 'அன்பு சுவர்' என்ற திட்டத்தை ஏற்கெனவே தொடங்கி வைத்தார். மேலும் தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்தும் வகையில் தனியார், அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து 'க்ளீன் தாமிரபரணி' என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகள், பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக 'கால் யுவர் கலெக்டர்' என்ற திட்டத்தை பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் தொடங்கி வைத்தார். அதற்கான 9786566111 என்ற தொடர்பு எண்ணையும் கலெக்டர் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரமும் புகார் அளிக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல் மூலமும் கலெக்டரின் பார்வைக்கு பிரச்சனைகளை கொண்டு வரலாம். இந்தத் திட்டம் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tags: News, Lifestyle