முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!
Posted on 17/05/2022
ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. மும்பை, டெல்லி, சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 11 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெறுவதாகத் தகவல்.. ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை. பணப்பரிவர்த்தனை மோசடி தொடர்பான புதிய வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: News