பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் - மத்திய அரசு அறிவிப்பு!
Posted on 14/07/2022
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாள்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய அனைத்து வயதினருக்கும் முன்பு 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 6 மாதமாக குறைக்கப்பட்டது.
வைரஸ் பாதிப்பு இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது.
செலுத்தப்பட்டதால் சற்று ஓய்ந்திருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.
இதையடுத்து, வயதானவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags: News