பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

பாஜக ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி ரூ.50 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பர்.” என்று பதிவிட்டுள்ளார்.
 
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மாற்று மதத்தினர்தான் கோயில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.
 
இதனிடையே, பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்தி கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்கிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top