திமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர திடீர் உத்தரவு - பரபரப்பு!
Posted on 14/02/2017
திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் ஆட்சியமைக்க வாய்ப்பு கோரியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது திமுக.
Tags: News, Art and Culture