பரிசு மழையில் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு!

பரிசு மழையில் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வமும் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பல அமைச்சா்கள் வந்திருந்தனா். மொத்தமாக 571 காளைகள் களம் கண்ட நிலையில், 697 மாடுபிடி வீரா்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 2 முறை நேரம் நீட்டிக்கப்பட்டது. இறுதியில் 5 மணிக்கு போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரா் மற்றும் சிறந்த காளைகளின் விவரங்களை தெரிவித்தார்.

அதன்படி ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கிய அஜய்க்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து 6 காளைகளை அடக்கிய இரண்டு வீரா்களுக்கு சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், களத்தில் சிறப்பாக செயல்பட்ட 9 காளைகளின் உரிமையாளா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி சிறப்பாகவும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறாமல் இருக்க ஒத்துழைத்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆட்சியா் தெரிவித்தார்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top