நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Posted on 15/12/2016
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து மதுக்கடைகளையும் 2017 ஆண்டில் மார்ச் 31 க்குள் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
நெடுஞ்சாலைகளின் ஓரமாக செயல்பட்டு வரும் மதுக்கடைகளால் வாகன விபத்துகளும், சாலை விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதனால் அவற்றை மூட உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் கே. பாலு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமார்வு இன்று விசாரித்தது. இதனையடுத்து மாநில மற்றும் தேசிய நெஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து மதுக்கடைகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டது.
தற்போது செயல்படும் மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு மார்ச் 31 வரை நடத்தலாம் என்றும் அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags: News