தினகரன் பொதுச்செயலாளரான அதிருப்தியில் அ.தி.மு.க செயலாளர் ராஜினாமா!
Posted on 15/02/2017
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிறையில் இருக்கும்போது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுசெயலாளராக நியமனம் செய்தார்.
அதிமுகவில் பல சீனியர் தலைவர்கள் இருக்கும்போது ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு துணைபொதுச்செயலாளர் பதவி அளித்திருப்பது கட்சியினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிருப்தியின் விளைவாக துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி ஓபிஎஸ் அணியில் இணைவதா என்பது குறித்த அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று கருப்பசாமி பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Tags: News, Madurai News, Art and Culture