எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள்!
Posted on 11/02/2017
கூவாத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் 129 பேரும் செய்தியாளர்களை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அவர்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி ஒன்றிற்கு தொலைப்பேசி மூலம் பேட்டி அளித்த தோப்பு வெங்கடாசலம், இங்கு நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். நாங்கள் இங்கு தங்கி இருப்பது பிடிக்காதவர்கள் தான் வதந்திகளை பரப்பி வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தங்கி இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலுக்கும் அதிமுக.,வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
செய்தியாளர்களை சந்திக்க 129 எம்.எல்.ஏ.,க்களும் தயாராக உள்ளனர். மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். செய்தியாளர்கள், எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து சந்தித்து தான் வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags: News, Madurai News, Art and Culture