அவசரகாலத் தேவைக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி!
Posted on 13/04/2021
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து 91.6% செயல்திறன் கொண்டது. இதனை பொதுமக்களுக்கு வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர காலத் தேவைக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3வது தடுப்பூசி இதுவாகும்.
ரஷ்யா உள்ளிட்ட 55 நாடுகளில் ஸ்புட்னிக்-வி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ வல்லுநகர்கள் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.