பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் நன்றி!
Posted on 23/01/2021
வங்கதேசத்தில் இதுவரை 5.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,981 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், புனே சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை, வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.