வைகுண்ட ஏகாதசி பற்றியதான கல்வெட்டுக்கள்!
Posted on 24/12/2020
ஸ்ரீரங்கம் கோயிலில் முதலாம் குலேத்துங்கனது 40 ஆவது அரசாட்சி ஆண்டுக் கல்வெட்டு வைகுண்ட ஏகாதசி திருநாளை திருவாய்மொழி கேட்டருளும் பொதுத் திருநாள் என்று குறிப்பிடுகிறது. இரண்டாம் இராசாதிராசதேவன் (கி.பி. 1146 - 1163) ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வைகுண்ட ஏகாதசித் திருநாள் நடந்தமையைத் தெரிவிக்கிறது. அது வைகுந்தத் திருநாளும், திருவேட்டைத் திருநாளும் நடைபெற்றதைக் குறிக்கின்றது.இரண்டாம் ராசேந்திரன் (கி.பி. 1216 - 1256) பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், வீரராமநாதனின் (கி.பி. 1263) எட்டாம் ஆட்சியாண்டில் கல்வெட்டும் ‘‘திருவத்தியயனம் பெருமாள் எழுந்தருளித் திருமாலை எடுப்பதற்கு’’ என்றும், ‘‘வைகுண்ட தாசர் திருநாள்கள் திருவத்தியயனத் திருநாள்களுக்கும் ஒரு திருமாலை சாத்துதற்கும்’’ என்றும் இவ்விழா பற்றிக் குறிக்கின்றன.