தமிழக அரசியலைப் பார்த்து ஆவேசமடைந்த பிரபல நடிகை!
Posted on 11/02/2017
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இரண்டு மாதங்கள் முதல்வர் பதவியில் வீற்றிருந்த ஓபிஎஸ் அவர்களை திடீரென பதவி விலக செய்துவிட்டு சசிகலா அந்த பதவிக்கு வரத்துடிக்கும் மனப்பான்மையை கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கண்டித்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவுக்காக ஓட்டு போட்ட நிலையில் அந்த ஓட்டை பயன்படுத்தி சம்பந்தம் இல்லாத ஒருவர் பதவிக்கு வருவது குறித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா, 'தயவு செய்து என் ஓட்டை திருப்பி தந்துவிடுங்கள். திருப்பி தாங்கடா'' என்று ஆத்திரத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு வாக்காளர் தான் அளித்த வாக்கை திருப்பி கேட்பது என்பது ஆத்திரத்தின் உச்சக்கட்டம் என்றே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags: News, Lifestyle, Art and Culture