விஜய் அண்டனியின் 'கோடியில் ஒருவன்' ஏப்ரலில் வெளியீடு

விஜய் அண்டனியின் \'கோடியில் ஒருவன்\' ஏப்ரலில் வெளியீடு

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் அண்டனியின் நடிப்பில் தயாராகிவரும் 'கோடியில் ஒருவன்' திரைப்படம் ஏப்ரலில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'ஆள்', 'மெட்ரோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோடியில் ஒருவன்'.  இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கிறார். இவர்களுடன் 'கே ஜி எஃப்' பட புகழ் ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் நிறைவுபெற்று , முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் கோடியில் ஒருவன் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இதனிடையே நடிகர் விஜய் அண்டனி  தற்போது 'தமிழரசன்', 'அக்னிசிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2 'ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவரது நடிப்பில் தயாராகியிருக்கும் 'கோடியில் ஒருவன்' தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top