தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட டென்டர் விண்ணப்பம் ஆரம்பம்!
Posted on 04/05/2017
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான டென்டர் பொது அறிவிப்பு நேற்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்தபட்டது.
அதன் அடிப்படையில் நடிகர் சங்கம் அலுவலகத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்தி,பூச்சி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K.வெங்கட்ராமன் அவர்களும் ஓய்வு பெற்ற பொது பணி துறை தலைமை பொறியாளர் S.திருமாறன் அவர்களும் டென்டர் பெட்டியை சீல் வைத்தனர். நேற்று முதல் மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்பமுள்ள நிறுவனங்கள் டென்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டென்டர் பெட்டியில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News, Hero