மீண்டும் சினிமாவிற்குள் பிரவேசிக்கும் சீமான்!
Posted on 06/12/2018
அரசியலில் மும்முரமாக செயற்பட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சீமான், தற்போது மீண்டும் சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.
அந்தவகையில், ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தவம் படத்தில் பள்ளி ஆசிரியராக இருந்து விவசாயத்தை காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் சீமான் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து தெரிவித்த இயக்குனர், “இந்த படம் விவசாய பின்னணியில் உருவான படம். புதுக்கோட்டை பகுதியில் இடம்பெறும் கதை. நாயகன் வசீ, ஏ டூ இசட் என்ற நிறுவனம் நடத்துபவர்.
ஒரு திருமணத்துக்காக அவரை சந்திக்கும் நாயகி பூஜாஸ்ரீ அவருடன் நட்பாகிறார். பூஜாஸ்ரீ தேடிக்கொண்டிருக்கும் நபர் வசீ என்பது தெரியவருகிறது. அவர் ஏன் வசீயை தேடுகிறார் என்பதே கதை. இரண்டாம் பாதி முடிவில் நாயகனின் தந்தையாக சீமான் நடித்திருக்கிறார்.
1996-ல் நடக்கும் கதையில் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற போராடும் கதாப்பாத்திரத்தில் சீமான் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது நாயகன் என்று அவரை குறிப்பிடலாம். நடிப்பதை தவிர்த்து வந்தவர் இந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை கூறிய பின்னர் ஒப்புக்கொண்டார். இவர்களுடன் சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்’ என குறிப்பிட்டார்.
Tags: News, Hero, Madurai News