மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத்குமார்

மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத்குமார்

ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ருத்ரன்' என்ற படத்தில் நடிகர் சரத்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. ஹாரர் த்ரில்லர் ஜேனரில் தயாராகும் இந்தப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சிஸ்ஸிலிங் ஸ்டார்' பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சரத்குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
 
நடிகர் சரத்குமார் ஏற்கனவே 'புலன் விசாரணை', 'சண்டமாருதம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். அத்துடன் ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் வெளியான 'காஞ்சனா' படத்திலும் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் ‘ருத்ரன்’ படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
 
நடிகர் சரத்குமார் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top