காதலை தூண்டும் ஓவியா... தடுமாற்றத்தில் ஆரவ்!!!
Posted on 02/08/2017
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஓவியாவும் ஆரவ்வும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஓவியா பல சமயங்களில் ஆரவ்வை தொட்டு பேசிய போதெல்லாம் அவர் தவறாகவே நினைத்ததில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஓவியா அவருக்கு பின்னால் வந்து தோளை தொட்டதை ஒரு பெரிய பிரச்னையாக ஆரவ் அனைவரிடமும் புகார் கூறி வருகிறார்.
ஓவியா தன்னை தொந்தரவு செய்வதாகவும், அவரால் தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் நடிப்பு வாழ்க்கை ஆகியவை பாதிக்கும் என்று பயமாக இருப்பதாகவும் பிக்பாஸிடம் குற்றம் சாட்டி உள்ளார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஆரவ் யார் என்பதே அதிகம் தெரியாது. இதில் எப்படி அவரது திரையுலக வாழ்க்கை பாதிக்கப்படும்.
ஓவியாவுடன் நெருங்கி பழகுகிறார் என்ற காரணத்தால்தான் ஆரவ்வுக்கு இதுநாள் வரை நெட்டிசன்கள் மரியாதை கொடுத்து வந்தனர். ஆனால் இனிமேல் நெட்டிசன்கள் ஆரவ்வை வச்சு செய்வார்கள் என்பது உறுதி.
திடீரென ஓவியாவை வெறுத்து ஒதுக்குவதோடு புறங்கூறுவதையும் பார்த்தால் காயத்ரி போன்றோர் அவரை பிரைன்வாஷ் செய்திருக்கலாம் என்றும் ஓவியாவுக்கு ஆரவ் நம்பிக்கை துரோகம் செய்கிறாரோ என்றும் சந்தேகப்பட வைத்துள்ளது என்று கடுப்புடன் தெரிவிக்கின்றனர் நெட்டிசன்கள். இதனால் இனி நெட்டிசன்களிடம் சிக்கி ஆரவ் கிழிப்பட போகிறார் என்பது உறுதி.
Tags: News, Hero, Star