விசாரணைக்கு பதில் மேக்பெத் ஆஸ்கருக்கு தேர்வு
Posted on 16/12/2016
இந்திய அளவில் தமிழ் திரைப்படங்களின் வரிசையில் விசாரனை படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் ‘விசாரணை’ படம் இடம்பெறவில்லை. இதுக்கு பதிலாக ஆஸ்கர் விருதுக்கு மற்றொரு இந்திய படம் ஒன்று தேர்வாகியுள்ளது.
சிறந்த பாடல் பிரிவில் மலையாளத்தில் உருவாகி வரும் ‘வீரம்’ படம் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஜெப் ரோன் என்பவர் இசையமைத்துள்ளார். காரி கிம்மெல் என்பவர் பாடியிருக்கிறார்.
மொத்தம் 91 பாடல்கள் இப்படத்தின் பாடலுடன் ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இத்தனை பாடல்களில் இந்த பாடல் ஆஸ்கருக்கு தேர்வாகுமா? என்பது வரும் ஜனவரி 24-ந் தேதி தான் தெரியவரும். ‘வீரம்’ படம் பிரபல ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய மாபெரும் காவியமான ‘மேக்பெத்’ (Macbeth)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது.மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ள இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் குணால் கபூர் நடித்துள்ளார். இந்திய அளவில் மும்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
Tags: News