உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர்!
Posted on 14/08/2017
PNP CINEMAS தயாரிப்பில் இயக்குனர் தினேஷ் பாபு இயக்கும் படம் "கிருஷ்ணம்". அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், அஸ்வரியா, மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.
படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் மலையாளத்திலும், கன்னடத்திலும் பணியாற்றியவர் வித்தியாசமான கதைகள் அமைப்பில் "கிருஷ்ணம்" படத்தை இயக்கியிருக்கிறார். இந்த கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். இந்த கதையை படமாக்க முயற்சி செய்து கதாநாயகனாக நடிக்க பல நடிகர்களை தேர்வுசெய்து இருக்கிறார். ஆனால் யாரும் பொருத்தமானவர்களாக அமையவில்லையாம். கடைசியில் எந்த இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே கதாநாயகனாக்க முடிவுசெய்து கடைசியில் அவரையே வைத்து படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
நாயகனுக்கு உண்மையில் சிரித்த, அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம். இயக்குனர் சொல்லிக்கொடுக்காமலேயே சில காடசிகளில் மிக தத்ருபமாக நடித்தாராம்.
உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது பெரும் சவால் அதை தான் சிறப்பாக செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குனர் தினேஷ் பாபு. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகும் இந்தப்படத்திற்கு ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தினேஷ் பாபு, பாடல்கள் சந்தியா.
Tags: News, Hero, Star