மதுரை ரசிகர்களிடம் தனி மரியாதை வைத்திருக்கும் கார்த்தி!

மதுரை ரசிகர்களிடம் தனி மரியாதை வைத்திருக்கும் கார்த்தி!

டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை‘ சினிமா திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதீராவ் ஆகியோர் நேற்று மதுரை வந்தனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘காற்று வெளியிடை‘ சினிமாவுக்கு ஆதரவு கேட்டு ரசிகர்களிடையே இருவரும் பேசினர்.

நடிகர் கார்த்தி, “இந்த கல்லூரிக்கு முதல் முறையாக வருகிறேன். மாணவர்களின் ஆதரவு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த நாள் நிச்சயம் மறக்கமுடியாத நாளாக இருக்கும் என நினைக்கிறேன். ‘காற்று வெளியிடை‘’படம் சூப்பர்ஹிட் ஆகும் என நம்புகிறேன். மதுரை ரசிகர்களிடம் தனி மரியாதை வைத்துள்ளேன். இந்த படத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரர்களுடன் நடித்துள்ளேன். ராணுவ வீரர்களை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்லுங்கள்.” என்றார்.

நடிகை அதிதீராவ், “அனைவருக்கும் காதல் கதை பிடிக்கும். இந்த படமும் காதல் கதைதான். எனவே வெற்றிப்படமாக ஆக்கித்தர வேண்டும்” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள், கார்த்தியையும், அதிதீராவையும் செல்போனில் ஆர்வத்துடன் படம் எடுத்தனர். சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top