நடிகை சமந்தாவின் பரோபகாரம்!

நடிகை சமந்தாவின் பரோபகாரம்!

நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தனது பெற்றோர் இறந்துவிட்டதால், சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருவதாகவும், அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
 
அதைக் கேட்ட சமந்தா, அவருக்கு தன் சொந்த செலவில் ஒரு கார் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதை வைத்து டிராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு வாக்குறுதி தந்தார். 
 
இந்நிலையில், கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக நடிகை சமந்தா, அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஏழைப் பெண்ணுக்கு உதவிய நடிகை சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top