பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கும் கொரோனா தொற்று பாதிப்பு!
Posted on 04/05/2021
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவிற்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியான 'கோச்சடையான்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் படங்களில் மட்டுமல்லாமல் ஹொலிவுட் படங்களில் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றிருக்கிறார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவர் மருத்துவரின் அறிவுரையை ஏற்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
இதனிடையே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தையும், முன்னாள் இந்திய பேட்மிட்டன் விளையாட்டு வீரருமான பிரகாஷ் படுகோனேவிற்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு மூன்று நாளில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.