அருவியை ஓரங்கட்டி தீரனை கையிலெடுத்த தயாரிப்பாளர்!
Posted on 26/10/2017
மாயா, ஜோக்கர், மாநகரம், கூட்டத்தில் ஒருத்தன் என போன்ற படங்களைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் அருவி. இப்படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அருவி படத்தை விரைவில் வெளியிட முமடிவு செய்திருந்தனர்.
அதற்கு முன்னோட்டமாக இப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்புக்காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு 'அருவி' படத்தை பார்த்தார். படம் முடிந்த கையோடு அருவி படத்தைப் புகழ்ந்து தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டரில் பாராட்டினார்.
''அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் 'அருவி' பட சிறப்புக்காட்சியைப் பார்த்தேன். அருமையான டீம் ஒர்க். அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கி இப்படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கதாபாத்திர வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும். குறிப்பாக நடிகை அதிதி பாலனின் நடிப்பும் மிகச்சிறப்பு. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை தியேட்டர்களில் கண்டுகளித்து திறமையான இளைஞர் கூட்டத்தை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!'' என்று குறிப்பிட்டார்.
இதுபோன்ற புரமோஷன்களால் அருவி படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. ஒரு ஏரியாவுக்குக் கூட என்கொயரி வரவில்லை. எனவே அப்ஸெட்டான தயாரிப்பாளர்கள் அருவி படத்தை ஓரமாக வைத்துவிட்டு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Tags: News, Hero, Star