பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க மறுக்கும் நயன்!

பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க மறுக்கும் நயன்!

கொலையுதிர் காலம் படத்தில் பிரபுவதேவாவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம் நயன்தாரா. சக்ரி டோலாட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ஹாரர் படம் கொலையுதிர் காலம். இந்த படம் மூலம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. 

கொலையுதிர் காலம் படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். வில்லனாக பிரபுதேவா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிலும் பிரபுதேவாவையே வில்லனாக நடிக்க வைக்க தீர்மானித்தார்களாம். முதலில் சரி என்று சொல்லிய நயன்தாரா பின்னர் பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம். பிரபுதேவாவுடன் நடிக்க நயன்தாரா மறுத்ததால் வேறு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Art and Culture, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top