சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை
Posted on 08/12/2020
தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சின்னத்திரை உலகில் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை சித்ரா. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான குடும்ப ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை சித்ரா. விதவிதமான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி இணையத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவேற்றும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டேல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ரா மன விரக்தியின் காரணமாக இத்தகைய முடிவை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.