பாலா மற்றும் சீமானால் மனம் உடைந்த சசிகுமார்.!

பாலா மற்றும் சீமானால் மனம் உடைந்த சசிகுமார்.!

நடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் தொடங்கி தொடர்ந்து சிக்கனமான பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்துக் கொண்டு நிம்மதியாக இருந்த சசிகுமாரைத் தேடி சனியன் பாலா ரூபத்தில் வந்தது.

வேறு ஒரு தயாரிப்பாளருடைய இயக்கத்தில் சசிகுமாரை ஹீரோவாக வைத்து தாரை தப்பட்டை படத்தை இயக்குவதாக சொல்லிக்கொண்டு வந்தார் பாலா. அவர் சொன்ன தயாரிப்பாளர் என்ன காரணத்தினாலோ ஓட்டம் எடுக்க, தாரை தப்பட்டையை நீயே புரட்யூஸ் பண்ணு என்று சசிகுமாரின் தலையில் கட்டியிருக்கிறார் பாலா. சசிகுமார் தயங்க, 10 கோடியில் பண்ணலாம் என்று பாலா சொன்னதை நம்பி 'தாரைத்தப்பட்டை' படத்தைத் தயாரித்தார் சசிகுமார்.

10 கோடியில் பட்ஜெட்டில் துவங்கப்பட்ட தாரைதப்பட்டை முடியும்போது 32 கோடியை முழுங்கி ஏப்பம்விட்டிருந்தது. அந்தப்படத்திற்காக அன்புச்செழியனிடம் 15 கோடி கடன் வாங்கினார் சசிகுமார். மொத்தக்கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டியை மட்டும் கட்டி வந்துள்ளார் சசிகுமார். அப்படியும் கடன் அடையவில்லை. எனவே கொடிவீரன் படத்துக்கு பரதன் பிலிம்ஸ் என்ற பைனான்சியரிடம் கடன் வாங்கினார் சசிகுமார். அதனால் கடுப்பான அன்புச்செழியன், கொடிவீரன் படத்தை மதுரையில் ரிலீஸ் செய்ய முடியாதபடி ரெட் போட வைத்துள்ளார். அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் அசோக்குமார்.

தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில் அன்புச்செழியன் தன்னை டார்ச்சர் பண்ணியதை குறிப்பிட்டிருந்தார். அன்புச்செழியன் மீது போலீஸில் புகார் கொடுக்க இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு சசிகுமாரைத் தேடி வந்த பாலா, அந்த லட்டரை போலிஸில் காட்டினால் அன்புவுக்கு பிரச்சனை வரும்.. வேண்டாம்.. லட்டரை மறைத்துவிடுங்கள்' என்று சசிகுமாருக்கு அட்வைஸ் செய்தாராம்.

அசோக்குமாரின் சாவுக்கு காரணமான அன்புச்செழியனை காப்பாற்ற வந்தாயா? மொதல்ல இங்கேருந்து வெளியே போ. என்று கெட்டவார்த்தையில் திட்டி அங்கிருந்து அவரை வெளியேற்றி இருக்கிறார் அமீர். இன்னொரு பக்கம் சசிகுமாருக்கு போன் செய்து, அன்புச்செழியன் நல்லவன். செத்துப்போனவனுக்காக அவரை பகைச்சுக்காதே என்று சசிகுமாருக்கு அட்வைஸ் பண்ணினாராம் சீமான். தனக்கு எல்லாமுமாக இருந்த அசோக்குமாரை இழந்துவிட்டு நிற்கும் சசிகுமாரை, பாலா, சீமான் இருவரது செயலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நான் மதித்த இரண்டு பேரும் இப்படி இருக்காங்களே என்று வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார் சசிகுமார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top