பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பால் தேமல் பாதிப்புக்குரிய சிகிச்சை!
Posted on 22/07/2022
இன்றைய சூழலில் பிறந்து இரண்டு மாதங்களான குழந்தைகளில் சிலருக்கு வாய் மற்றும் கழுத்து பகுதிகளில் Drool Rash எனப்படும் பால் தேமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சையை கண்டறிந்திருக்கிறார்கள்.
குழந்தைகள் பிறந்து 2 மாதத்திற்கு பிறகு தான் சலைவா கிளாண்ட் எனப்படும் எச்சில் சுரக்கும் சுரப்பி செயல்படும். பற்கள் கூட முளைத்திராத அந்த தருணத்தில் சுரக்கும் எச்சில் வாய் வழியாக ஒழுகிக் கொண்டிருக்கும். இது இயல்பானதுதான். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்த எச்சிலுக்கு, தோல் எதிர்வினையாற்றும். அதுதான் பால் தேமல் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக இது போன்ற பால் தேமலுக்கு தாய்மார்கள் soft burb cloth எனப்படும் பிரதியேக பருத்தியிலான துணியை அவர்களது கழுத்து பகுதியில் கட்டி விடுவார்கள். இது இதனால் அவர்களது கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பரவுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பிரத்தியேக பருத்தியிலான துணியை கொண்டு, அழுத்தமாக துடைக்காமல் அவர்களது எச்சிலை மென்மையாக ஒற்றி எடுப்பார்கள். இதனைக் கடந்து சில குழந்தைகளுக்கு மட்டுமே இது தோல் பாதிப்பாக மாறக்கூடும். அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து சென்றால், அவர்கள் பால் தேமலா அல்லது வேறு வகையான தானா என்பதனை சோதித்து அறிந்து, பிரத்தியேக களிம்பினை மருந்தாக பூசுமாறு பரிந்துரைப்பார்கள். மேலும் மிக அரிதாகவே சில குழந்தைகளுக்கு மட்டுமே இது baby Acne என்ற தோல் பாதிப்பாக மாறும். இதற்கும் மருத்துவர்களின் பரிந்துரையின் படி சிகிச்சையை தொடர்ந்தால் நாளடைவில் இது மறையக் கூடும்.
டாக்டர். சதீஷ் குமார்
தொகுப்பு: அனுஷா
Tags: News