ரத்த அணுக்கள் குறைபாடு (Aplastic Anemia) பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

ரத்த அணுக்கள் குறைபாடு (Aplastic Anemia) பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

“ எம்முடைய எலும்பு மஜ்ஜையிலிருந்து இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் ஆகியவை உற்பத்தியாகிறது. Precursor Stem cell என்ற மூல செல்களிலிருந்து இந்த மூன்று வகையான அணுக்கள் உற்பத்தியாகிறது. இந்நிலையில் ஒரு மில்லியன் மக்களில் மூன்று பேருக்கு அப்லஸ்டிக் அனிமியா எனப்படும் ரத்த அணுக்கள் குறைபாடு என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புள்ளவர்களுக்கு இந்த வகையான மூன்று அணுக்களும் தேவையான அளவிற்கு உற்பத்தி ஆவதில்லை. இத்தகைய பாதிப்பு எந்த வயதிலும், யாரையும் தாக்கக்கூடும். அதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் உரிய தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.” என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஸடீவ் தோமஸ், Consultant of haematology அப்லஸ்டிக் அனிமியா பாதிப்பு குறித்தும், அதற்கான நவீன சிகிச்சைக் குறித்தும் மேலதிக விளக்கம் பெற அவரைச் சந்தித்தோம். 

அப்லஸ்டிக் அனிமியா என்றால் என்ன?
 
எலும்பு மஜ்ஜை வளர்ச்சியின் போது ஏதேனும் தடைகளோ அல்லது இடையூறுகளோ ஏற்பட்டு, அதன் காரணமாக அனைத்து வகையான ரத்த அணுக்களின் உற்பத்தியில் உண்டாகும் குறைபாட்டிற்கு தான் அப்லஸ்டிக் அனிமியா பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் இயல்பான அளவைவிட கூடுதலாக சோர்வு ஏற்பட்டு, தொற்று நோய்கள் மற்றும் கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு உண்டாகி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும். இது எந்த வயதிலும் ஏற்படலாம். திடீரென்று நிகழக்கூடும் அல்லது சிறிய அளவில் தோன்றி நாளடைவில் தீவிரமாகி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அறிகுறிகள்..?
 
சோர்வு, மூச்சுத் திணறல், சீரற்ற இதயத்துடிப்பு, தோலில் மாற்றம், தலைவலி, காய்ச்சல், மயக்கம், திடீரென்று உடலில் ஏற்படும் சிராய்ப்பு போன்ற காயங்கள், அடிக்கடி ஏற்படும் நோய்த்தொற்றுகள், வெளிறிய தோல், காயம்பட்ட இடங்களிலிருந்து நிற்காத ரத்த கசிவு, குறிப்பாக பற்கள், ஆசனவாய், பிறப்புறுப்புப் பகுதி போன்றவற்றிலிருந்து இரத்த கசிவு ஏற்படுவது..போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பொது மருத்துவரையோ அல்லது பிரத்யேக மருத்துவரையோ சந்தித்து சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.

இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
 
பேறுகாலத்தின் போது எம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் உங்களுடைய எலும்பு மஜ்ஜையைத் தாக்கக்கூடும். சிலருக்கு பராக்ஸிஸ்மல் நாக்டர்னல் ஹீமோகுளோபினூரியா எனப்படும் அரிய கோளாறு ஏற்பட்டிருக்கும். இதன்போது ரத்த சிவப்பணுக்கள் செயல்பாட்டில் தடை ஏற்பட்டு இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது.
 
Fanconi Anemia என்ற பாதிப்பு ஏற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டைவிரலின் வளர்ச்சியில் முரண்பாடு ஏற்பட்டிருக்கும்.அவர்கள் குட்டையாகவும் இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு இயல்பான அளவை விட கூடுதலான அளவில் மச்சம் ஏற்பட்டிருக்கும். Dyskeratosis Congenital என்ற பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நகத்தின் அமைப்பு வித்தியாசமாகவும், வளர்ச்சி அடையாமலும் இருக்கும். அவர்களின் தோல் பகுதியிலும், உள்ளங்கையிலும் மாறுபாடான வண்ணமயமான மாற்றங்கள் ஏற்படலாம். நாக்குப் பகுதியில் வித்தியாசமான வெள்ளை படலம் உருவாகி இருக்கும். TERT Gene Mutation எனப்படும் குரோமோசோம்களின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பால், சிலருக்கு இளவயதிலேயே தலைமுடி நரைத்து விடும். இத்தகைய பாதிப்புள்ளவர்களுக்கும் அப்லஸ்டிக் அனிமியா ஏற்படக்கூடும்.
 
உடலியக்க பாதிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் உள்ள வேதிப்பொருள்கள்,  ஒவ்வாமையை ஏற்படுத்தி இத்தகைய பாதிப்பை உண்டாக்கும். வேறு சில வைரஸ் தொற்றுக்கள் பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய குறைபாடு உண்டாகும். புற்றுநோய்க்காக மேற்கொள்ளும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு பக்கவிளைவாக இத்தகைய குறைபாடு உண்டாகும். ஓட்டோ இம்யூன் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இத்தகைய குறைபாடு ஏற்படக்கூடும். குறிப்பாக நோயெதிர்ப்பு செல்களான டி செல்கள் இயல்பான அளவைவிட கூடுதலாக உற்பத்தியாகி, நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, இத்தகைய குறைபாட்டை உண்டாக்கக் கூடும். வேறு சிலருக்கு மேற்கூறிய எந்த காரணமும் இல்லாமல், இனம் கண்டறிய முடியாத காரணங்களாலும் கூட அப்லஸ்டிக் அனிமியா என்ற பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை இடியோபதிக் என வகைப்படுத்துவர்.
 
வேறு சிலருக்கு கீமோதெரபி என்ற சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது அவர்களுக்கு எலும்பு மஜ்ஜையின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, இத்தகைய செல் உற்பத்தி குறைபாட்டை உண்டாக்கிவிடும். இதன் காரணமாகவும் அப்லஸ்டிக் அனிமியா ஏற்படக்கூடும் ஏற்படும். இதனை மருத்துவர்கள் Latrogenic என வகைப்படுத்துவர்.
 
இதற்குரிய பரிசோதனை ?
 
விரிவான முறையில் ரத்த பரிசோதனை மேற்கொள்வர். இதன் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை, அதன் வீரியம், செயல்படும் தன்மை ஆகியவற்றை பரிசோதிப்பார்கள். பிறகு எலும்பு மஜ்ஜையிலிருந்து திசு பரிசோதனை மேற்கொண்டு, ஸ்டெம் செல்லின் எண்ணிக்கையும், வீரியத்தையும் கண்டறிந்து இதன் பாதிப்பை உறுதிப்படுத்துவர்.
 
சிகிச்சை..?
 
உடலியக்க பாதிப்பிற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால்..., அதனை தற்காலிகமாக நிறுத்த பரிந்துரைப்பர். ஏனில் நீங்கள் உட்கொள்ளும் குறிப்பிட்ட மருந்திலுள்ள ரசாயனங்கள் உங்கள் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு எதிராக இருக்கக்கூடும். வேறு சிலருக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையின் அளவில் மாறுபாடு இருந்தால், அவர்களுக்கு ரத்தத்தை நேரடியாக வழங்கும் சிகிச்சையைப் பரிந்துரைப்பர். வேறு சிலருக்கு பிரத்யேக ஊசி செலுத்துவதன் மூலம் உங்களுடைய உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப்பு செல்களான டீ செல்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவர். இதன் காரணமாக இத்தகைய நோய்க்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இருந்தால் அதற்கேற்ற மருந்துகளையும், ஊசிகளையும் பரிந்துரைப்பர். வேறு சிலருக்கு இத்தகைய சிகிச்சை மேற்கொண்டும் முழுமையான பலனளிக்கவில்லை என்றால், அவர்களுக்கு போன்மேரோ டிரன்ஸ்பிளாண்டேஷன் எனப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை என்ற நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைப்பர். இதன்போது உங்களுடைய உறவினர்களின் இடுப்புப் பகுதியிலிருந்து எலும்பு மஜ்ஜை திரவத்தை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து, அதனை சுத்திகரித்து, அதன்பிறகு பாதிக்கப்பட்ட நோயாளியின் இடுப்பு பகுதியில் செலுத்துவர். இதன்போது ஆண்டிஜன் மேட்சிங் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்வர். 
 
இத்தகைய பாதிப்பு வராமல் தடுக்க இயலுமா?
 
பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பெயிண்ட் ரிமூவர்ஸ் போன்ற நச்சு கலந்த ரசாயனங்களின் பயன்பாட்டை முற்றாக தவிர்ப்பதன் மூலம் இதன் அபாயத்தை குறைக்கலாம். மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 44 45928548 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top