சிறார்களுக்கு ஏற்படும் லிம்ப் - ஜேர்டில் தசைநார் சிதைவு எனப்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை!
Posted on 25/07/2022
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் வரை அரிதாக ஏற்படும் லிம்ப் - ஜேர்டில் மஸ்குலர் டிஸ்டிராபி எனப்படும்இடுப்பு மூட்டு தசைநார் சிதைவு பாதிப்பு ஏற்படுகிறது. பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது ஜீன் தெரபி என்ற புதிய சிகிச்சை முறையால் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
எம்மில் சிலரின் பிள்ளைகளுக்கு கை மற்றும் கால்களில் உள்ள தசைகளில் பலவீனம் மற்றும் சிதைவு ஏற்படும். இது ஒரு கூட்டு நோய் பாதிப்பாகும். இதனால் தசைகள் பலவீனமடைவதுடன் உடலுக்கு அதாவது தோலுக்கு நெருக்கமாக இருக்கும் தசைகள், குறிப்பாக கைகள், இடுப்பு பகுதி, தொடை பகுதி போன்றவற்றில் உள்ள தசைகள் பலவீனமோ அல்லது சிதைந்தோ போய்விடும்.
வயது மற்றும் உடலில் உள்ள இணை பாதிப்புகளைப் பொறுத்து இதன் வீரியம் ஏற்படும். மேலும் இதற்கான அறிகுறிகள் எந்த வயதிலும் ஏற்படக்கூடும். ஒரே குடும்பத்தில் இவை பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வயதில் வரும் என்று வரையறுக்க இயலாது. ஆனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட பிறகு நாளடைவில் அவை மோசமடைந்து பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடும்.
சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவர்களால் நடக்கவோ, நிற்கவோ, அமர்ந்து எழக்கூட முடியாத நிலை உருவாகும். இவர்களுக்கு சக்கர நாற்காலி சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு ஜீன் தெரபி என்ற சிகிச்சையை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வழங்கினால் அவர்களின் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும். இத்தகைய புதிய சிகிச்சை மூலம் தசை நார்களின் பலவீனம் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் அதன் திறன் மருத்துவர்களின் உணவு முறை, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தவும் இயலும்.
டாக்டர். கோட்டீஸ்வரன்
தொகுப்பு: அனுஷா
Tags: News