குழந்தையின்மை சிகிச்சையில் இமாலய சாதனை!

குழந்தையின்மை சிகிச்சையில் இமாலய சாதனை!

திருமண வைபவத்திற்கு பிறகு அந்த குடும்பத்தில் நிகழக்கூடிய மிக சந்தோஷமான நிகழ்வு குழந்தை பிறப்பு தான். குழந்தை பேறு குடும்பத்தை முழுமை பெறச் செய்கின்றது. “தனிமரம் தோப்பாவதில்லை” என்பது போல், ஒரு குடும்பத்திற்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும்வரை அந்த கணவன் - மனைவியர் குடும்பம் எனும் நிறைவான அந்தஸ்த்தை பெறுவதில்லை. தம்பதியர் என்ற நிலையிலேயே நின்று விடுகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க குழந்தை பேற்றை, தாமதமாகவாது அடைந்திட துடித்துக்கொண்டிருக்கும் தம்பதியர்கள் ஏராளம்.

குழந்தைச் செல்வம் என்கின்ற ஐஸ்வர்யத்தை உங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் காத்து கொண்டிருக்கிறது மதுரையின் ஐஸ்வர்யா மருத்துவமனை! குழந்தையின்மைக்காக நவீன சிகிச்சைகள் பற்றியும் மகப்பேறு வேண்டி தவித்திடும் தம்பதியர்களுக்கும் அட்வென்சர் பத்திரிக்கை மூலம் பகிர்கிறார் டாக்டர். சந்திரலேகா அவர்கள்.

மதுரை, சென்னை, கோவை, பழனியில் மழலை இன்பம் தழைக்கச் செய்வதில் சரித்திரம் படைத்து வருகின்றது ஐஸ்வர்யா மருத்துவமனை. குழந்தைபேறு இல்லாத தம்பதிகள் முறையாக பரிசோதிக்கப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு முறையாக சிகிச்சை அளித்து மழலைச் சொல் கேட்டு மகிழும் தம்பதியர்களாக்கும் மகத்துவத்தை இந்த மருத்துவமனை செய்து வருகின்றது. இப்படிச் சொல்கிறார் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பல தங்கப்பதக்கங்களை பெற்ற டாக்டர். சந்திரலேகா.

டாக்டரின் ஆலோசனைக்கு ஒரு இடம், ஸ்கேன் செய்ய ஒரு இடம், ஹார்மோன் பரிசோதனைக்கு ஒரு இடம், ஆண் மலட்டு தன்மைக்கு ஒரு இடம் என்று ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனியே செல்லவேண்டியதில்லை. ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனையாக இது உள்ளது. எல்லாத்துறைகளிலும் சிறப்பு வாய்ந்த நிபுணர்கள் இங்கே வருவதால் தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

Bio-chemistry, Micro Biology, auto analyzer, Hormone analyzer, Elisa Reader என்று அனைத்து வசதிகளும் நிரம்பிய பரிசோதனைச்சாலை இங்குள்ளது. ஆண் மலட்டுத்தன்மையை கண்டறியும் விந்தணு பரிசோதனை ஆண் உடலின் இரத்தத்தில் உயிர் அணுக்கள் எதிர்ப்பு சக்தி உள்ளதா எனக் கண்டறியும் விசேஷ பரிசோதனை போன்றவற்றை இங்கேயே மேற்கொள்ளலாம்.

ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை அறியும் Doppler scan Test வசதியும் இங்கே அமையப்பெற்றுள்ளது. ஆண் மலட்டு தன்மைக்கான காரணங்களை கண்டறிந்து ஆண் மலட்டுத் தன்மை சிகிச்சை நிபுணர்களின் தக்க ஆலோசனைகளுடனும், ஆணுறுப்பு இரத்த குழாய்கள் விரிவடையும் பிரச்சினைகளையும் Doppler scan மூலம் கண்டறியப்பட்டு நவீன லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் சரியான தீர்வுகள் அளிக்கப்படுகின்றன.

பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்களை ஆராய்ந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு மிக நவீன சிகிச்சை முறைகளின் மூலமாக சரியான தீர்வுகள் அளிக்கப்படுகின்றன. மருந்துகளின் மூலம் சரிசெய்ய முடியாத அறுவை சிகிச்சை மட்டுமே, தீர்வாக இருக்கும் சில காரணங்களுக்கு - எடுத்துக்காட்டாக கருமுட்டைப்பையில் சிறுசிறு நீர்க்கட்டிகள் இருப்பது, கருமுட்டைப்பையில் பெரிய நீர்க்கட்டி இருப்பது, கருப்பையில் கட்டி இருப்பது மற்றும் சினைக் குழாயில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளுக்கும் வீடியோ லேப்ராஸ்கோப்பி மூலம் நிரந்தர தீர்வளித்து குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்துள்ளோம்.

பெண்களுக்கு மிகச் சிக்கலான நுணுக்கமான அறுவைச் சிகிச்சையான சினைக் குழாய் இணைப்பு அறுவை சிகிச்சையை திறம்பட செய்து அவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கின்றது. இப்படிப்பட்ட பெண்களுக்கு சோதனைக்குழாய் சிகிச்சை மூலமும் குழந்தைபாக்கியம் அளிக்க முடியும். மனைவிக்கு கருமுட்டை வளர்ச்சி சரியாக இல்லாமல் இருந்து கணவருக்கும் விந்தணு எண்ணிக்கை சற்றுக்குறைவாக இருந்து மனைவிக்கு தக்க சிகிச்சை அளித்து கணவரின் விந்தணுவை ஊசி மூலமாக கருமுட்டை வெடிக்கும் நாளில் மனைவியின் கருப்பையில் செலுத்தும் IUI முறை மூலமாக கருத்தரிக்கும் வாய்ப்பினை பெற்று எங்கள் மருத்துவமனை மூலமாக குழந்தை பெற்றுள்ள தம்பதிகள் ஏராளம்.

செயற்கைமுறை கருத்தரித்தலில் மிக முக்கியமாக விளங்கும் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை உலகத்தர மிக்க நவீன கருவிகளைக் கொண்டு மிகச்சிறந்த நிபுணர்களின் உதவியுடன் செய்து உலக அளவிற்கு ஈடான ஒரு வெற்றியை ஒவ்வொரு முறையும் அளித்து சாதனை புரிந்து வருகின்றது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top