பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பாதிப்பிற்கு பலனளிக்கும் ஐ வி எம் (In vitro Maturation)
Posted on 08/10/2016
‘இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலை கழக உயிரியல் மற்றும் உயிரி வேதியல் துறைகள் இணைந்து கருமுட்டை இல்லாமல் உயிரணுக்கள் மூலமே ஒரு குழந்தையை உருவாக்க இயலும் என்பதை பரிசோதனை முறையில் ஒரு எலியை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு எதிர்காலத்தில் மகப்பேற்றின்மைக்கான எளிமையானதொரு வழியைக் காட்டுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.’ என்ற துறை சார்ந்த தகவலை எம்முடன் பகிர்ந்துகொண்டபடியே பேசத் தொடங்குகிறார் Dr.பிரீத்தி. இவர் சென்னையில் சர்வதேச தரமுடன் இயங்கி வரும் ப்ரைம் ஓபிஜி கருத்தரித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை மருத்துவ நிபுணராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை நூற்றிற்கும் அதிகமான குழந்தைகளை செயற்கை முறை கருவூட்டல் மூலம் பிரசவிக்கச் செய்து பல குடும்பங்களின் சந்தோஷ அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார். இவரிடம் எம்முடைய வாசகர்கள் கேட்க சொன்ன சந்தேகங்களை கேட்ட போது, அவர் அளித்த பதில்கள் இவை.
* கருவகம் பற்றிய பரிசோதனையில் 3 டி தொழில்நுட்பம் பரிச்சயமானது. அது என்ன 4 டி (Live image) தொழில்நுட்பம்?
இன்றைய தேதியில் குழந்தையின்மைக்கான சிசிக்சைக்காக வரும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு எண்டோமெட்ரியல் எனப்படும் கருப்பையகத்தில் குறைபாடு, கோளாறு, சிக்கல் ஆகியவையே அதிகமாகயிருக்கிறது. இவர்களின் பிரச்சனையை துல்லியமாக கண்டறிவதற்காக இந்த நவீன 4டி (Live image) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது முப்பரிமாண தொழில்நுட்பத்தைக் காட்டிலும் துல்லியமானது. இதன் மூலம் கருவகத்தில் செலுத்தப்படும் உயிரணுக்கள், கருவாக உருவாகாததன் காரணத்தை அறிந்து கொள்ளவும் இயலும். அத்துடன் எத்தகைய மருந்துகள் அவசியப்படலாம் என்பது குறித்தும், எவ்வகையான சிகிச்சை முறை அவசியமாகும் என் பது குறித்தும் அறிந்து கொள்ள இயலும். அத்துடன் கருத்தரித்தலின் வெற்றி வீதத்தை அதிகரிப்பதற்கான சிகிச்சை முறையை குறித்தும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். எண்டோ மெட்ரியல் பொலிப்ஸ் எனப்படும் கருவக கட்டிகளை அதிலும் பினைன் கட்டிகளை கண்டறிந்து அகற்ற முடியும். அத்துடன் ஐ வி எஃப்பின் போது கருவினை உள்ளே பொருத்துதலுக்கு இவற்றின் துணை அவசியமாகிறது. இதனால் அதன் வெற்றி வீதமும் உயருகிறது.
* பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சின்ட்ரோம் பாதிப்பு உள்ள பெண்களுக்கு ஐ வி எஃப் என்ற சிகிச்சை சிறந்த பலனளிப்பதாக சொல்கிறார்களே அதைப் பற்றி..?
ஐ வி எஃப்பிற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் முட்டை சரியான தருணத்தில் வெளியே வருவதற்காக மருந்து மாத்திரைகள் தரப்படும். ஒரு சில பெண்களுக்கு இதன் பின் விளைவாகவோ அல்லது மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை சற்று அலட்சியப்படுத்தியதாலோ சிலருக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ் என்ற பாதிப்பு ஏற்படக் கூடும். இத்தகைய பெண்களுக்காகவே இந்த சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பெண்களிடமிருந்து எந்த மருந்து மாத்திரைகளும் இன்றி, அவர்களின் வளர்ச்சியுறாத கருமுட்டை பெறப்பட்டு அவை தனியாக மருத்துவ ஆய்வகத்தில் உள்ள இன்குபெற்றரில் வைத்து கண்காணித்து வளர்த்தெடுக்கப்படும். பின் னர் உயிரணுவுடன் இணைக் கப்பட்டு ஐ வி எஃப் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்த பாதிப்பு உள்ள பெண்களும் ஐ வி எஃப் மூலம் குழந்தைபாக்கியம் கிடைப்பது உறுதி செய்யப் படுகிறது.
* ERA சோதனை எதற்காகச் செய்யப்படுகிறது?
ஒருசில பெண்களுக்கு அவர்களின் பாரம்பரியம், வாழிடச்சூழல், உணவு பழக்க வழக்கம் போன்ற சில காரணங்களினால் அவர் களின் கர்ப்பப்பை குறை பாடு உடையதாக இருக்கும். இதனை கண்டறிய ERA என்ற பரிசோதனை உதவுகிறது. இதன் போது கருப்பையில் இருந்து சிறிய அளவு திசுவை எடுத்து, இதில் கருவை பற்றிக்கொள்ளும் ஜீன்ஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதும் குறித்தும், அதன் வீரியம் குறித்தும் அறிய முடியும். ஒரு கருவை பிரிக்க 238 ஜீன்ஸ் இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டால், அதற்கு பொருத்தமான சிகிச்சையை மேற்கொண்டு தொடரலாம்.
* இக்சி-யைப் பற்றி..?
விந்தணுவை நேரடியாக கருப்பையில் செலுத்துதலே இக்சி முறை. குறைவான விந்தணு எண்ணிக்கையுடையவர்களுக்கு இந்த முறை வெற்றிதரக்கூடியது. தற்போது ஐ வி எஃப்வை விட இக்சியே அதிகளவில் வெற் றியை அளித்து வருகிறது.
* கருமுட்டை தானம் அல்லது விந்தணு தானம் குறித்து தம்பதிகள் அவசியம் பெறவேண்டிய விளக்கம் என்ன?
சில ஆண்களுக்கு விந் தணுவேயில்லை என்றாலும் கூட அதாவது ஜீரோ அக்கவுண்ட் என்ற நிலை இருந்தாலும் கூட அவர்களின் விதைப்பையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்து, அங்கு எங்கேனும் உயிரணுக்கள் தேங்கியோ தங்கியோ இருந்தால் அதனை எடுத்து கரு உண்டாக்கி மனைவியின் கருப்பையில் வைத்து அவர்களுக்கு குழந்தைபாக்கியத்தை வழங்க இயலும். இதிலும் தோல்வி என்றால் மட்டுமே உயிரணு தானம் என்ற நிலைக்கு செல்லலாம்.
அதேபோல் பெண் களுக்கும் நாற்பது வயதைக் கடந்துவிட்டால் அவர்களுக்கு கருமுட்டை இயற்கையாக இருக்காது அல்லது இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே கருமுட்டை தானம் நோக்கி செல்லலாம். கருமுட்டை வளர்ச்சியின்மை அல்லது வேறு ஏதேனும் அறுவை சிகிச்சையால் கருமுட்டை உற்பத்தியில் முழுஅளவிலான பாதிப்பு போன்ற நிலை ஏற்பட்டாலும் கரு முட்டை தானம் நோக்கி பயணிக்கலாம்.
* பல முறை ஐயூஐ மற் றும் ஐ வி எஃப் மற்றும் இக்சி போன்ற சிகிச்சைகள் செய்தும் தோல்வியைக் கண்ட பெண்கள் உளரீதியாக பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு எம்மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்?
இதுபோன்ற சிக்கல்களைச் சந்தித்த பெண்களிடம் ஐ வி எஃப் என்பது உங்களின் வாழ்க்கையின் இறுதிகட்டமல்ல என்பதை தெளிவுப்படுத்துவேன். அத்துடன் வெற்றி கிடைக்கும்வரை மனஉறுதியுடன் போராட வேண்டும் என்பதையும் இதமாகவும் இனிமையாகவும் இன்முகத்துடனும் சொல்வேன். நாள்தோறும் மகப்பேறு மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து வருவதையும், உங்களுடைய தேவைகளை மருத்துவதுறை பூர்த்தி செய்யும் என்றும் கூறுவேன்.
* வருங்கால பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி பற்றிய தான தங்களின் மருத்துவ அறிவுரையை வழங்கவும்?
உணவு பழக்கவழக்கத்தினால் உண்டாகும் புதிய மாற்றங்களால் வருங்காலத்தில் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் கணிணி பயன்படுத்தி வேலை பார்க்கும் பெண்களுக்கும் மற்றும் வேலை பளு அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தினாலும் பாலிசிஸ்டிக் ஓவரி ஏற்படலாம். இத்தகைய பெண்களுக்கு கருமுட்டை முதிர்ச்சியடைவதும் சிரமத்திற்குள்ளாக்கப்படும்.
* எம்ப்ரியாஸ் கோப் என்ற கருவியின் செயல்பாடு எப்படி அமைகிறது?
பொதுவாக செயன்முறைக் கருவூட்டலில் நடை பெறும் நிகழ்காலங்களில் கருமுட்டையில் விந்தணு சேர்க்கப்பட்ட பின்னர், அக்கருவானது இரண்டு செல்களாக வளரும் நிலையை 25 முதல் 27 மணிநேரத்திலும், அதன் பின்னர் 62 மணி நேரத்தில் செல்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை கணக்கிடலில் துரிதமான செல்பிரிவு (செல்டி விஷன்) என்பது மிகவும் உகந்தது. மிக அதிகமான அல்லது மிகக் குறைந்த செல்களின் எண்ணிக்கை மரபுசார் சிக்கல்களுக்கு காரணமாய் இருக்கும். செல்களின் எண்ணிக்கை இரட்டைப்படை யில் இருப்பதும் நல்ல கருவைக் கொடுக்கும். சில கருவானது மூன்று செல்களாக சில மணி நேரங்கள் இருந்து பின்பு அதிகரித்து இரட்டைப்படையாக மாறலாம். இம்மாற்றங்களை தொடர் கண்காணிப்பின் மூலமே கண்டறியலாம்.
மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கலப்பிரிவுகள் அதிகாலையில் நடைபெறுவதால் அந்த நேரத்தில் கருவை கண்காணிக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் பழைய முறையில் உண்டு. இவற்றைத் தவிர ‘ப்ளாஸ் டோமியர்’என்ற கருவில் உள்ள செல்கள் ஒரே மாதிரியான அளவில் இருத்தல் அவசியம். சில நேரங்களில் செல்கள் துண்டுதுண்டாக உருவாகி பின்பு ஒன்று சேர்ந்து ஒரே மாதிரியாகவும் காட்சியளிக்கலாம். டிரான்சென்ட் ஃப்ராக்மென் டேஷன் என்றழைக்கப்படும் இந்நிலையை உடனுக்குடன் கண்காணித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கலப்பிரிவு நடக்கும் கால அளவு மற்றும் நேரம் வெற்றிகரமான மகப்பேற்றிற்கு வழி வகுக்கிறது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அதுபோன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு எம்ப்ரியோஸ்கோப் உதவுகிறது.
விபரங்களுக்கு :
Ph: 044 - 24455772, 24411007,
Cell: 9941670007,
E-mail: info@primeopg.com
Website: www.primeobg.com
Tags: News, Lifestyle