உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!

உலகத்தையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆணிவேராய் அமைந்த உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு விழாவில் 950 காளைகள் மற்றும்  1,650 காளையர்கள் (மாடுபிடி வீரர்கள்) பங்கேற்றுள்ளனர்.
 
ஜல்லிக்கட்டு விழாவினை காலை 8 மணிக்கே மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்,  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களிடம்,  நாட்டு மாடுகளை பாதுகாத்து, காளைகளை எக்காரணம் கொண்டும் துன்பறுத்த மாட்டோம்’, என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக துணை நின்ற ராகவா லாரன்ஸ் அவர்களும் போட்டி தொடங்கியதிலிருந்தே கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டு கொண்டிருக்கிறார். மேலும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top