இந்திய உடல்உறுப்பு கொடையாளர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி
Posted on 30/11/2016
இந்திய உடல்உறுப்பு கொடையாளர் தினம் மற்றும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் முன் நிறுத்தி முன்னிட்டு நவம்பர் மாதம் 28ம் தேதி சாஸ்தா கிட்னி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவில் தொடங்கி, அவுட்-போஸ்ட் பெரியார் சிலை வரை மாபெரும் தியாகம் செய்தோருக்கும் நன்றி கூறும் மனித சங்கிலி அமைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியை மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் திரு. சரவணன் அவர்கள், பெரியகுளம் தொகுதியை சார்ந்த டாக்டர். கதிர்காமு ஆகியோர் தலைமை வகித்தனர்.
மருத்துவர் திருமதி தேவிராணி, மருத்துவர் திரு. பழனிராஜன், திரு. கோகுலகிருஷ்ணன், திரு ஹரிமாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Tags: News, Madurai News