ஜெ.வுக்காக அனைத்துக்கட்சி மௌன ஊர்வலம்
Posted on 07/12/2016
மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவில் கொடி கட்டி பறந்தவருமான அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா திடீரென ஏற்பட்ட உடல் நலக் கோளாறு காரணமாக டிச 5 ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் இயற்கை எய்தினார். டிச 6 ஆம் தேதி அவரின் உடல் மெரினா கடற்கரை அருகே ஒட்டியுள்ள எம்.ஜி,ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது. இச்சமபவத்தால் தமிழகம், அதிமுக தொணடர்களும் மீளா துயிலில் இருக்கிறது.
அவருடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர். சுமார் 5000 பேர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள் 600 பேர் தலையை மொட்டையடித்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags: News, Madurai News