பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் தேமுதிக தலைவர் கோரிக்கை
Posted on 09/01/2017
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
மேலும், கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் தங்கள் பிள்ளைகள் போல் மாடுகளை வளர்த்து வருகின்றனர் என கூறினார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Tags: News, Madurai News, Art and Culture