ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில 59வது குடியரசு தின தடகளப்போட்டி துவக்கவிழா!
Posted on 09/12/2016
மாண்புமிகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீவி.கலசலிங்கம் பல்கலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை நடத்தும் 59வது மாநில குடியரசு தின 3நாள் தடகளப் போட்டிகளுக்கான துவக்கவிழா பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் சா.கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்கள் விளையாட்டிற்கு மட்டும் 10கோடி ஒதுக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையால் தேசிய அளவில் விருதுநகர் மாவட்டம் 5வது இடமும் தடகளப் போட்டியில் விருதுநகர் மாவட்டம் 2வது இடமும் பெற்று சிறந்து விளங்குகிறது.
மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு அழைத்து பணமுடிப்பு வழங்குவதும், மிகவும் பாராட்டுதற்குரியது என்றும் கூறினார். விருதுநகர் மாவட்ட பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் எ. புகழேந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
Tags: News, Lifestyle, Institute