ஆன்லைனில் வர்த்தகத்தில் அசத்தும் காயத்ரி!

ஆன்லைனில் வர்த்தகத்தில் அசத்தும் காயத்ரி!

சுயதொழில் ஒன்று துவங்கி அதில் சிறப்பு பெற்று விளங்கவேண்டும் என்கிற ஒரு குறிக்கோள்தான் இன்றைய பெண்களின் மத்தியில் நிலவி வருகிறது. ஏதாவது ஒரு துறையில் வீட்டிலிருந்தே பல பெண்கள் சாதனைப்புரிகிறார்கள்.

மேலும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் அவர்களுக்கு சரியான ஒரு பாலமாக அமைந்து ஸ்மார்ட்போன் மற்றும் கணிணியின் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் ஒரு விஷயத்தை சாத்தியமாக்கியுள்ளது. அப்படிதான் இன்று திருமதி.காயத்ரி அவர்களும் சாதிக்கிறார்கள். தற்போது இவர்களின் வாடிக்கையாளர்கள் தமிழகம், இந்தியா, துபாய் தாண்டி அமெரிக்கா வரை இருக்கிறார்கள். சரி அப்படி என்ன ஸ்பெஷலாக விற்பனை செய்கிறார்கள்? அவர்களிடமே கேட்போம்!

‘அழகு மற்றும் அலங்காரம் இந்த விஷயங்களுக்கு இன்று மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றேதான் சொல்ல வேண்டும். எத்தனை கோடி செலவு செய்து வீட்டைக் கட்டினாலும் சில ஆயிரங்கள் மதிப்புள்ள அலங்காரப் பொருட்கள்தான் வீட்டை அழகுப்படுத்துகிறது. அப்படி நான் தெரிவுசெய்த அலங்காரப்பொருள்தான் ஒயிட் மெட்டல். தமிழகத்தில் அதிகம் பரிச்சியம் இல்லாத ஒயிட் மெட்டல் அலங்காரப் பொருட்கள் காண்பதற்கு விலை அதிகம் போல தெரிந்தாலும் விலை மிகக்குறைவு. எனக்கு கல்லூரி முடிந்த உடனே திருமணமும் முடிந்தது. வீட்டில் என்னால் டிவி முன்னர் அமர்ந்து நேரத்தை செலவு செய்யமுடியவில்லை. எனவே, என்னை எம்.எல்.எம் பிஸ்னஸ்களில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து, என்னுடைய வாழ்வை மாற்றியது. வீட்டிலிருந்தே ஏதாவது செய்யலாம் என்கிற ஒரு நிர்பந்ததிற்குள் வந்தேன். அப்போதுதான் எனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் ஆல்-லைனில் விற்பனை செய்வது பற்றி தெரிய வந்தது. அப்போது மதுரையில் எந்த விஷயம் இல்லை, எது அதிகம் விரும்பப்படும் என சிந்தித்தேன். நம் மக்கள் அழகிற்கும் அலங்காரத்திற்கும் அதிகமாக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் விலையும் அதிகமாக இருக்கக்கூடாது. அப்படி ஒன்றை தேடியபோது எனக்கு கிடைத்ததுதான் ஒயிட் மெட்டல் அலங்காரப்பொருட்கள். தொடக்கத்தில் பெங்களூருவிலிருந்து வாங்கி விற்பனை செய்து வந்தேன். பின் முகப்புத்தகத்தின் வாயிலாக என் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதனால் ஒயிட் மெட்டல் அலங்காரப்பொருட்களின் உற்பத்தியாளர்களே என்னை நேரடியாக தொடர்ந்து கொண்டு வியாபாரம் செய்கிறார்கள்.

பல்வேறு வகைகளில் காண்போரை அசத்தும் அழகில் திகழும் அந்த அலங்காரப் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகி தற்போது ஒருசிலர் அமெரிக்காவிலிருந்து எனக்கு ஆர்டர்ஸ் கொடுக்கிறார்கள். நான் அவற்றை இங்கிருந்து அவர்களுக்கு அனுப்பிடுவேன்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top