தமிழ்நாடு அரசியலில் ஈடுபடுகிறாரா பேரறிவாளன்?
Posted on 24/05/2022
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் நிரபராதிகள் ஆக இருந்து சிறையில் இருப்பவர்களுக்கு சட்டரீதியிலான உதவி செய்வது குறித்த சமூக சேவை செய்ய ஆர்வம் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் தனது சிறை அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக எழுத ஆசை என்றும் சிறையில் இருக்கும் போது ஏற்பட்ட மன போராட்டம் குறித்து எழுதினால் அது மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் தனக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தனது அம்மாவின் ஆசை என்றும் அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மா என்னை பெற்றெடுத்தார் என்றும் அதன்பிறகு 31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அம்மா என்னை பெற்றெடுத்துள்ளார் என்றும் அம்மா தான் இனி என்னுடைய வாழ்க்கை என்றும் அந்த பேட்டியில் பேரறிவாளன் தெரிவித்தார்.
Tags: News