மதுரை நிறுவனம் அசத்தல் - தமிழ்நாடு ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ்!

மதுரை நிறுவனம் அசத்தல் - தமிழ்நாடு ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ்!

மதுரையைச் சேர்ந்த கொரியர் நிறுவனம் ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ் செய்து வரும் அசத்தல் தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மதுரையில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்று தன்னுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை அலுவலகத்திற்கு ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் சேவையை தொடங்கியுள்ளது. இது கொரியர் சேவையில் மிகப் பெரிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த ட்ரோன் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 45 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கொரியரில் அனுப்பப்படும் பார்சல்கள் உடனுக்குடனே கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
 
சோதனை முயற்சியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் சேவை படிப்படியாக நாடு முழுவதும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் ட்ரோன் மூலம் மிக அதிக அளவில் கொரியர் சர்வீஸ் மட்டுமின்றி உணவு பரிமாற்றம் சேவையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top