செல்போன் வழிப்பறி கொள்ளையர்களால் மாணவனின் உயிர் போன சோகம்!

செல்போன் வழிப்பறி கொள்ளையர்களால் மாணவனின் உயிர் போன சோகம்!

மதுரை மகால் 7-வது தெருவைச் சேர்ந்த திரு.குமரேசன் பாபு என்பவரின் மகன் நாகராஜ்.  பிளஸ் 2 படித்து வந்த இவரின் செல்போன் கொள்ளை தொடர்பான அகால மரணம் பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையாகும். மதுரையில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் பெருகி வருகின்றன. பணம், கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியைக் காட்டிலும், பாக்கெட்டிலே வைத்திருக்கும் பர்சை காட்டிலும் மிக எளிதாக வழிப்பறி செய்ய முடிகின்ற செல்போன்களே தற்போது கொள்ளையர்களின் இலக்காக இருந்து வருகின்றது. இதிலே படிக்கின்ற சின்னப்பிள்ளை, வயதானவர்கள் என்ற கணக்கே இல்லை.

குறிப்பாக மாணவர்கள், நடைபாதைகளிலும், வீட்டு முகப்புகளிலும் தம்முடைய செல்போன்களை பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கின்ற நிலையை உருவாக்குகின்றன. மேலும் இவ்விதமான செல்போன் கொள்ளையடிப்பவர்கள் ஏவி விடப்பட்ட சிறார்களாக இருக்கின்றார்கள். இவர்கள் பிடிபடும் போது சிறார்கள் சட்டத்தின்கீழ் மிக எளிதாக தப்பித்துக் கொள்ளவும் வழி ஏற்பட்டு விடுகின்றது. எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை எச்சரித்து வையுங்கள்.

மதுரையில் 12.3.2017, ஞாயிற்றுக்கிழமை இரவு, மாணவர் நாகராஜ் செல்போன் கொள்ளையர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயமாகும். மறைந்த மாணவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோமாக!

Tags: News, Madurai News, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top