காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்கக் கூட்டம்!
Posted on 08/10/2016
கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்கக் கூட்டம் மதுரை கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அச்சமயத்தில், இந்த கூட்டத்திற்கு திரு.ஜெகதீசன் தலைமை தாங்கினார். திரு.விஜயராகவன் மற்றும் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்ட நடவடிக்கைகளின் போது மூன்று ஏழை நபர்களுக்கு சட்டை துணிகள், வேஷ்டிகள், அரிசி முதலியன வழங்கப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்செல்வம் அவர்கள் மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சா தத்துவங்களைப் பற்றியும், சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தியாகப் பயணங்கள் பற்றியும் விரிவாக விவரித்தார்.
சங்கத்திற்கான புதிய இலச்சினையும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள் சம்பந்தமாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்களில் சங்க உறுப்பினர் திரு.சந்தீப் அவர்கள் பெரும் பங்கு வகித்தார்கள். மேலும் இவரே சங்கத்தின் கூட்டம் நடைபெறுவதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Tags: News, Madurai News, Lifestyle