தவறான செய்தியால் மக்கள் பதற்றம்!

தவறான செய்தியால் மக்கள் பதற்றம்!

ஊடகங்களில் வெளியான முதல்வர் காலமானார் என்ற தவறான செய்தியால் மதுரையில் பல இடங்களில் பதற்றமான நிலை காணப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற ஊடகங்களின் செய்தியால் மக்களின் பதற்ற நிலை குறைந்திருந்தாலும் மதுரையில் அனைத்து கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு போக்குவரத்து பேருந்துகள் சிறிது குறைக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயங்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. அக்காட்சிகள்...

இந்த சிறிது நேரப் பதற்றம் நம் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் மீது வைத்துள்ள அளவுகடந்த பாசத்தில், அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்ற தவறான செய்தியைத் தாங்க முடியாமல் மதுரை மக்கள் மட்டுமல்லாமல் தமிழகமே நெஞ்சம் கனத்து அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர மீண்டும் பிராத்தித்து வர ஆரம்பித்து விட்டார்கள். தமிழக முதல்வர் அம்மா அவர்கள் புத்துயிர் பெற்று மீண்டும் தமிழகத்தை ஆண்டாண்டு காலம் ஆட்சியில் அமர்ந்து எங்களை வழி நடத்துவார் என்று மதுரையைச் சார்ந்த அனைத்து அதிமுக தொண்டர்களும் அவருடைய ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் இருவிரல் அசைவில் இந்த தமிழகமே புத்துணர்ச்சி பெரும் என்றால் மிகையாகாது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top