நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி வங்கி ஸ்டிரைக்!

நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி வங்கி ஸ்டிரைக்!

நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
 
அதன் படி வரும் 25ம் தேதி நான்காவது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இரண்டு நாட்கள் வார விடுமுறை ஆகும். அடுத்த நாளான திங்கள்கிழமை வேலை நிறுத்தம் என்பதால், அன்று பரிவர்த்தனைகள் நடைபெறாது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததால் தொடர்ந்து மூன்று நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
நாடு முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளனர். தங்களது கோரிக்கைகளை  வங்கி நிர்வாகமும், அரசும் கண்டு கொள்ளும் வரை போராட்டம் தொடருமென்று சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொருளாதாரத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட வாயுப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top