418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
Posted on 06/07/2022
418 ஆண்டுகளுக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.
இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெகு சிறப்பாக கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் பங்கேற்றனர் என்பது சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News